ஆப்நகரம்

துருக்கியில் ராணுவ எழுச்சிக்கு காரணம் என்ன?

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடான துருக்கி, கடந்த 1960 முதல் மூன்று ராணுவ புரட்சிகளை கண்டுள்ளது. தற்போது அடுத்த ராணுவ புரட்சியும் அங்கு வெடித்துள்ளது.

TOI Contributor 16 Jul 2016, 7:02 am
ஆங்காரா: இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடான துருக்கி, கடந்த 1960 முதல் மூன்று ராணுவ புரட்சிகளை கண்டுள்ளது. தற்போது அடுத்த ராணுவ புரட்சியும் அங்கு வெடித்துள்ளது.
Samayam Tamil why turkey is under a military uprising
துருக்கியில் ராணுவ எழுச்சிக்கு காரணம் என்ன?


துருக்கியில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், அந்நாட்டு தலைநகர் ஆங்காராவில் உள்ள அரசு மாளிகை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்றும் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

துருக்கியில் சர்வாதிகார ஆட்சி அதிகரித்து வருகிறது என்றும், தீவிரவாதம் பெருகி வருகிறது என்றும் மேற்கோள்காட்டி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட சில காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன.

ஜனநாயக மந்தநிலை:
கடந்த 2002-ஆம் ஆண்டில் எர்டோகன் அதிபராக பதவியேற்றார். அதிலிருந்து அந்நாட்டில் ஜனநாயக மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் முயற்சிப்பதாகவும், பேச்சு, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இஸ்லாமிற்கு சாயும் துருக்கி:
அதிபர் எர்டோகன் ஆட்சியில், மதச்சார்பற்ற துருக்கியின் மதிப்புகள் புறந்தள்ளப்பட்டு, இஸ்லாமிய சார்பு சட்டங்கள் இயற்றியது. அதன்மூலம் நாட்டை இஸ்லாம் சார்ந்து மற்ற முயற்சிப்பது.

அமெரிக்காவுடன் பதற்ற உறவு:
துருக்கி - அமெரிக்க ராணுவம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும், அமெரிக்க அதிபர் உள்பட உள்பட மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன், அதிபர் எர்டோகன் ஒரு பதற்றமான உறவையே கொண்டுள்ளார்.

ராணுவத்திற்கு எதிரான செயல்கள்:
எர்டோகன் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ராணுவ தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, பலருக்கு தண்டனை வழங்கியது.

அரசியலமைப்பை மாற்ற நினைப்பது: துருக்கியில், அமெரிக்க அதிபர் ஆட்சியை போன்று அரசியலமைப்பை மாற்ற நினைப்பது. இதன் மூலம் அவரது ஆதரவாளர்கள் பலர் அவரை விட்டு விலகிச் சென்றுள்ளனர்.

அடுத்த செய்தி