ஆப்நகரம்

அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? சிவி விக்னேஸ்வரன் அறிவிப்பு!

விரைவில் நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் தங்கள் ஆதரவு யாருக்கு என்று ஆராய்ந்து அறிவிப்போம் என்று சிவி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Nov 2019, 1:34 pm
இலங்கையின் அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. இதில்,
Samayam Tamil CV Vigneswaran


* கோத்தபய ராஜபக்சே, இலங்கை பொது ஜன பெரமுனா

* சஜித் பிரேமதாசா, ஐக்கிய தேசிய முன்னணி

* முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனா நாயக்

* எ.கே.சிவாஜிலிங்கம், தமிழர் கட்சி

அகதிகள் மறுவாழ்வுக்கு ஆப்பு வைக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இதில் கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையே கடும் போட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிபர் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கோத்தபய ராஜபக்சேவிற்கு இலங்கை சுதந்திர கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அதேசமயம் சஜித் பிரேமதாசாவிற்கு இலங்கை சுதந்திர கட்சி ஆலோசகர் சந்திரிகா குமாரதுங்கே ஆதரவு வழங்குவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டவட்டம்

ஒரே கட்சியை சேர்ந்த இரு தரப்பினர் வெவ்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், அதிபர் வேட்பாளர்களிடம் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதற்கு ஒரேவொரு வேட்பாளர் மட்டுமே மறுப்பு தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் வாக்களிக்க வேண்டும். எங்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை கொண்டு செல்வோம்.

தொல்லை தாங்க முடியல... வீட்டை மாற்றிய டொனால்ட் ட்ரம்ப் புலம்பல்

இந்த நோக்கில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இன்னும் 3 நாட்களில் யாருக்கு ஆதரவு என்பதை ஆராய்ந்து அறிவிப்போம் என்று கூறினார்.

அடுத்த செய்தி