ஆப்நகரம்

அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை?

அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 26 Nov 2016, 2:44 pm
மேடிசன்: அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil wisconsin is preparing to recount election votes after receiving petition from jill stein
அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை?


சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டஜனநாயகக் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். இவர்களை தவிர சில குட்டிக் கட்சிகளும் போட்டியிட்டன. அதில் ஒன்றான ‘க்ரீன் கட்சி’ வேட்பாளர் ஜில் ஸ்டேன் விஸ்கான்சன், மெக்‌ஷிகன், பென்சில்வேனியா ஆகிய 3 மாநிலங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளார்.

விஸ்கான்சன் மாநில தேர்தல் ஆணையமும் இந்த கோரிக்கையை ஏற்று மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோல மற்ற இரு மாநிலங்களும் விரைவில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

பல மாநிலங்களில் ஹிலாரி தோல்வியடைந்த போதிலும் குறிப்பாக இந்த மாநிலங்களில் மட்டும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை என கேள்வி எழுந்துள்ளது. ஹிலாரி இந்த மாநிலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

விஸ்கான்சின், மெக்‌ஷிகன் மாநிலங்களில் 10,000க்கும் சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஹிலாரி தோல்வியடைந்துள்ளார் . பென்சில்வேனியாவில் 60,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் உள்ளது.

இந்த மூன்று மாநிலங்களையும் சேர்த்து டிரம்ப் 306 வாக்குகள் கிடைத்துள்ளன.

தற்போது மறு எண்ணிக்கையில் டிரம்ப் தோல்வியடைந்தால், அவருடைய வாக்குகள் 260 ஆக குறையும். இது ஹிலாரி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவிர நாடு தழுவிய வாக்கு எண்ணிக்கையில் ஹிலாரி முன்னிலையில் இருக்கிறார். இதனால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு ஹிலாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறத்தி வருகின்றனர். மற்ற இரண்டு மாநிலங்களின் மறுவாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உள்ள பென்சில்வேனியாவில் வெற்றி பெறுவது சந்தேகம் தான். அதனால் டிரம்ப்பிற்கு எந்த நெருக்கடியும் இருக்காது.

அடுத்த செய்தி