ஆப்நகரம்

ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி ரேஸில் முந்தும் ஜோ பைடன்

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கிட்டதட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

Samayam Tamil 5 Nov 2020, 6:33 am
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்தவுடனே வாக்கு எண்ணிக்கையும் ஆரம்பமானது.
Samayam Tamil joe biden  trump


தொடக்கம் முதலே ஜோ பைடனுக்கும், டொனால்டு ட்ரம்புக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. வெவ்வேறு மாகாணங்களில் இருவரும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

வெற்றியை முடிவு செய்யும் மாகாணாங்களாக கருதப்படும் மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய மாகாணங்களில் டிரம்ப்பின் கை ஓங்கியுள்ளது.

கோர்ட்டுக்கு போனா அசிங்கப்படுவிங்க: ட்ரம்புக்கு எச்சரிக்கை!

மிச்சிகனில் ஜோ பைடனுக்கு 49.9 சதவீதமும், டிரம்புக்கு 48.6 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

270 இடங்களை கைப்பெற்றினால் பெரும்பான்மை பெறலாம் எனும் நிலையில் மிச்சிகன் மாநிலத்தில் 16 இடங்களை கைப்பற்றியதன் மூலம் 264 இடங்களில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார்.

கொரோனாவால் இறந்தவரை தேர்தலில் வெற்றிபெற வைத்த அமெரிக்கர்கள்!

டிரம்ப் 214 இடங்களில் முன்னிலை வகிக்கிறார். வாக்குகள் எண்ணும் பணி முடிவடையவில்லை என்பதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு காணப்படுகிறது. இருப்பினும் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் வாக்கு எண்ணிக்கையில் மோசடிகள் நடந்துள்ளதாக டிரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி