ஆப்நகரம்

பிரான்சில் மீண்டும் அதிர்ச்சி; சர்ச்சுக்குள் நுழைந்து தலையை வெட்டி கொடூரம்!

பெண்ணின் தலையை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Oct 2020, 8:11 pm
பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 16ஆம் தேதி வரலாற்று ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். முன்னதாக இவர் சார்லி ஹேப்டோ என்ற நாளிதழில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வகுப்பில் மாணவர்களிடம் காட்டியிருந்தார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கொலை செய்யப்பட்டார். இதற்கு பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சூழலில் நைஸ் நகரில் உள்ள சர்ச் ஒன்றில் இன்று பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil Nice Church Attack


அப்போது கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். அப்போது பெண் ஒருவரின் தலையை துண்டித்து மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை காண்பித்த செயலுக்கு தான் இந்த தண்டனையை மக்களுக்கு வழங்கியதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரம்; ஆசிரியர் தலை துண்டித்து கொடூர கொலை!

அடுத்த சில மணி நேரங்களில் தெற்கு பிரான்சின் அவிக்னோன் நகரின் மாண்ட்பேவட் பகுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வலம் வந்துள்ளார். அவர் அப்பகுதி மக்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியிருக்கிறார். மேலும் “அல்லாஹ் அக்பர்” என்றும் குரலெழுப்பியுள்ளார்.

இவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்ட போது, தப்பியோட முயற்சித்துள்ளார். அப்போது அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த இரு சம்பவங்கள் பிரான்ஸ் நாட்டை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி