ஆப்நகரம்

விமானத்தில் ஏறிய பெண் கணவனிடம் விவாகரத்து கேட்டு கலாட்டா!!

மாஸ்கோவில் இருந்து விலாடிவோஸ்டோக் என்ற இடத்திற்கு 500 பயணிகளுடன் புறப்பட விமானம் தயாராக இருந்தபோது, கணவனிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும், தற்போது விமானத்தில் பயணிக்கும் மன நிலையில் இல்லை என்றும் கூறி ஒரு பெண் செய்த கலாட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.

TOI Contributor 8 Jul 2016, 12:34 pm
மாஸ்கோவில் இருந்து விலாடிவோஸ்டோக் என்ற இடத்திற்கு 500 பயணிகளுடன் புறப்பட விமானம் தயாராக இருந்தபோது, கணவனிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும், தற்போது விமானத்தில் பயணிக்கும் மன நிலையில் இல்லை என்றும் கூறி ஒரு பெண் செய்த கலாட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil woman causes 7 hour flight delay after insisting on immediate divorce from husband
விமானத்தில் ஏறிய பெண் கணவனிடம் விவாகரத்து கேட்டு கலாட்டா!!


இந்த சம்பவம் கடந்த திங்கள் கிழமை நடந்தது. விமானம் புறப்பட தயாராக இருக்கும்போது 40 வயதுகளில் மதிக்கத்தக்க ஒரு பெண் அவ்வாறு கூறி, விமானத்தில் இருந்து இறக்கிவிடுமாறும், விமானப் பணிப் பெண்களிடம் கோரிக்கை வைத்து தர்ணா செய்தார். இதனால் பொறுமை இழந்த பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி விமான நிலையத்திற்கு சென்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் அந்தப் பெண்ணை சமாதானம் செய்து பார்த்தனர். ஆனால் அந்தப் பெண் பிடிவாதமாக கணவனை விவகாரத்து செய்ய முடிவு செய்துவிட்டதாகவும், விமானத்தில் இருந்து இறக்கிவிடுமாறும் கோரிக்கை வைத்தார். இதனால், 7 மணி நேர தாமதத்திற்கு பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த பிரச்சனையின்போது அவரது கணவர் விமானத்தில் இருந்தாரா? போன்ற விவரங்கள் தெரிய வரவில்லை. பயணி ஒருவர் இந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி