அமெரிக்காவில், மருத்துவர்கள் இறந்து விட்டதாக அறிவித்த 45 நிமிடங்களுக்கு பிறகு, பெண் ஒருவர் திடீரென உயிர்த்தெழுந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்டு பகுதியைச் சேர்ந்தவர் கேத்தி பேடன். இவர், கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில், உங்களது மகள் பிரசவ வலியில் துடிப்பதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை விரைந்த கேத்தி பேடனுக்கு, அதிக பதற்றம் மற்றும் பயம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கேத்தியை எமெர்ஜென்சி சிகிச்சையில் மருத்துவர்கள் அனுமதித்தனர். அவருக்கு துரித மருத்துவம் நடந்தது. ஆனால் வேகமாக சோர்வடைந்த கேத்தியின் உடல்நிலை சற்று நேரத்தில் அமைதியானது. அவரது ரத்த அழுத்தம் முழுவதும் குறைந்தது.
இதனால், அவரது மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் நின்றுவிட்டது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லாத நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில் பிரசவ வலியில் சேர்க்கப்பட்ட கேத்தியின் மகளுக்கு வெற்றிகரமாக பிரவமும் நடந்தது.
அந்த நேரத்தில் தான் மருத்துவ அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட கேத்தியின் ஆக்சிஜன் லெவல், திடீரென அதிகரித்து மீண்டும் உயிர் பிழைத்தார். இந்த அதிசயத்தால் மருத்துவர்களே ஆச்சரியத்தில் மூழ்கினர்.
இது குறித்து பேசிய கேத்தி பேடன், இது எனது வாழ்க்கையின் இரண்டாவது வாய்ப்பு. எல்லா வகையிலுமே நான் ஸ்பெஷலான ஒரு பெண். இனி வரும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து வாழ்வேன். இது என் புது வாழ்வு என தெரிவித்துள்ளார்.
தாய் உயிர் பிழைத்து வந்தது குறித்து கருத்துத் தெரிவித்த கேத்தியின் மகள், இது என்னுடைய தாயின் நல்ல விதி. அவர் இப்போது என்னுடன் இருக்கிறார் என்பது எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன். இது அதிசயமின்றி வேறொன்றுமில்லை என்றார். தற்போது கேத்தியும், அவரது மகள் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலாண்டு பகுதியைச் சேர்ந்தவர் கேத்தி பேடன். இவர், கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு போன் அழைப்பு வந்தது. அதில், உங்களது மகள் பிரசவ வலியில் துடிப்பதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அவரது மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் நின்றுவிட்டது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லாத நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதேவேளையில் பிரசவ வலியில் சேர்க்கப்பட்ட கேத்தியின் மகளுக்கு வெற்றிகரமாக பிரவமும் நடந்தது.
அந்த நேரத்தில் தான் மருத்துவ அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட கேத்தியின் ஆக்சிஜன் லெவல், திடீரென அதிகரித்து மீண்டும் உயிர் பிழைத்தார். இந்த அதிசயத்தால் மருத்துவர்களே ஆச்சரியத்தில் மூழ்கினர்.
இது குறித்து பேசிய கேத்தி பேடன், இது எனது வாழ்க்கையின் இரண்டாவது வாய்ப்பு. எல்லா வகையிலுமே நான் ஸ்பெஷலான ஒரு பெண். இனி வரும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து வாழ்வேன். இது என் புது வாழ்வு என தெரிவித்துள்ளார்.
தாய் உயிர் பிழைத்து வந்தது குறித்து கருத்துத் தெரிவித்த கேத்தியின் மகள், இது என்னுடைய தாயின் நல்ல விதி. அவர் இப்போது என்னுடன் இருக்கிறார் என்பது எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன். இது அதிசயமின்றி வேறொன்றுமில்லை என்றார். தற்போது கேத்தியும், அவரது மகள் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.