ஆப்நகரம்

குழந்தையை மடியில் ஏந்திக் கொண்டு தோ்வெழுதும் ஆப்கன் பெண்

ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவா் இரண்டு மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமா்ந்து தோ்வெழுதும் புகைப்படம் உலகம் முழுவதும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Samayam Tamil 22 Mar 2018, 5:42 pm
ஆப்கானிஸ்தானில் இளம்பெண் ஒருவா் இரண்டு மாத கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தரையில் அமா்ந்து தோ்வெழுதும் புகைப்படம் உலகம் முழுவதும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Samayam Tamil Jahan Taab


ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு நடைபெற்றது. இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் கலந்து கொண்டு தோ்வு எழுதினாா். ஜஹான் டாப் என்ற அப்பெண் தோ்வு எழுதிக்கொண்டு இருந்தபோது அவரது இரண்டு மாத கைக்குழந்தை அழுதுள்ளது.


உடனடியாக அப்பெண் குழந்தையை மடியில் ஏந்தியவாறு நாற்காலியில் இருந்து இறங்கி தரையில் அமா்ந்து தோ்வை தொடா்ந்து எழுதியுள்ளா்ா. இதனை கண்ட தோ்வு கண்காணிப்பாளா் அப்பெண்ணை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். தற்போது அந்த புகைப்படம் உலகம் முழுவதும் அதிக நபா்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அப்பெண்ணுக்கு வாழ்த்து மடல்களும் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி