ஆப்நகரம்

காருக்குள் ஓரினச்சேரிக்கையில் ஈடுபட்ட பெண்ணுக்கு பொதுஇடத்தில் பிரம்படி தண்டனை

மலேசிய நாட்டில் காருக்குள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கி அந்நாட்டின் ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 4 Sep 2018, 4:35 pm
மலேசிய நாட்டில் காருக்குள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கி அந்நாட்டின் ஷரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil canned-sex
ஓரினச்சேரிக்கையில் ஈடுபட்ட பெண்ணுக்கு பிரம்படி தண்டனை


ஓரின சேர்க்கைக்கு சில நாடுகளில் அனுமதி அளிக்கும் சட்டம் இருந்தாலும், பல்வேறு நாடுகளில் இவ்வகையான உறவுக்கு எதிர்ப்பே நிலவி வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் ஷரியா சட்டம் அமலில் உள்ளது. அந்த சட்டத்தின் படி, , மது அருந்துதல், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு, ஓரின சேர்க்கை, சூதாடுதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொழுபோக்கு இடங்களில் ஆண் (சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆண்கள் துணை) துணை இல்லாமல் இரவு 11 மணிக்கு மேல் பெண்கள் இருக்க கூடாது. இந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலேசியா நாட்டில் 22 மற்றும் 32 வயதுடைய இரண்டு இஸ்லாமிய பெண்கள் காருக்குள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெரன்காணு மாகாணத்தில் உள்ள ஷரியா உயர் நீதிமன்றம், அப்பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து, அப்பெண்களுக்கு பொது வெளியில் தலா 6 பிரம்படிகள் வழங்கப்பட்டன. இந்த மாகாணத்தில் ஒருபால் உறவு தொடர்பாக பொதுவெளியில் வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுதான் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்