ஆப்நகரம்

ஆமாம்... கொரோனா காற்றின் மூலம் பரவுவது உண்மைதான் போல... உலக சுகாதார அமைப்பு புதுகுண்டு!!

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 8 Jul 2020, 10:51 pm
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க, இரு நபர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே வழிகாட்டியிருந்தது.
Samayam Tamil air borne


இந்த வழிகாட்டுதலைதான் உலகின் பல நாடுகள் கடைபிடித்து வருகின்றன. ஆனால் தற்போது, கொரோனா வைரஸானது காற்றில் பல மீட்டர்கள் பயணிக்க வாய்ப்புள்ளது என்பதற்கான ஆதாரங்களை ஏற்றுகொள்வதாக இந்த சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தொற்றுநோய் தொழில்நுட்ப பிரிவு தலைவரான மரியா வான் கெர்கோவே கூறும்போது, "கொரோனா வைரஸ் பரவும் முறைகளில் ஒன்றாகக் காற்றின் மூலம் பரவுதல் குறித்து புதிய பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

காற்றிலேயே பரவுகிறதா கொரோனா- உலக சுகாதார நிறுவனம் ஆற அமர சொல்வதென்ன?

நோய் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்ப தலைவர் பெனடெட்டா அல்லெக்ரான்சி கூறும்போது, "காற்றின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன. பொது இடங்களில் காற்றின் மூலம் கொரோனா பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே கொரோனாவின் கோரப்பிடியில் சி்க்கியுள்ள உலக மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக,பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டது என்று தெரிய வந்துள்ளதாகவும், இதுதொடர்பாக உலக சுகாதா நிறுவனத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

அடுத்த செய்தி