ஆப்நகரம்

ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு!

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வான்வழி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.

Samayam Tamil 28 Aug 2018, 2:23 pm
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வான்வழி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.
Samayam Tamil germen
ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு!


ஜெர்மனியின் லூட்விக்ஷாபென் நகரில் கட்டுமான பணிக்காக குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது சுமார் 500 கிலோ எடை வெடிகுண்டு மண்ணுக்குள் மூழ்கியபடி இருந்தது. வெடிகுண்டை பார்த்தும் அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த, வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியில் உள்ள 18,500க்கும் மேற்பட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் ஒரு மணி நேரம் தீவிரமாக போராடி, அந்த குண்டை செயலிழக்க செய்தனர். இதனையடுத்து நிம்மதியடைந்த மக்கள் மீண்டும் தங்கள் குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த வெடிகுண்டு நிபுணர்கள், இது இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மன் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி