அபுதாபி: இந்தியாவில் உடல்பருமனைக் குறைக்கும் சிகிச்சை பெற்ற உலகின் குண்டான பெண் எமான் அகமது உயிரிழந்தார்.
எகிப்து நாட்டில் கெய்ரோ நகரைச் சேர்ந்தவர் எமான். 36 வயது பெண்மணியான இவருக்கு 11 வயதில் உடல்பருமனால் பக்கவாதம் ஏற்பட்டது. அன்று முதல் 25 ஆண்டுகளாக படுக்கையிலேயே நாட்களை கழித்து வந்தார். உடல் எடையும் தொடர்ந்து உயர்ந்து 500 கிலோ ஆகிவிட்டது. இப்போது, உலகிலேயே குண்டான பெண்ணான இவர் தனது உடல் பருமனால் கடும் கஷ்டங்களை அனுபவித்தார்.
இவருக்கு சிகிச்சையளித்து குணப்படுத்த முடியாமல் உலகெங்கும் உள்ள பல மருத்துவர்கள் கைவிட்டுட்டனர். இந்நிலையில், இந்தியாவில் மும்பை நகரில் உள்ள சாய்ஃபீ மருத்துவனை எமானுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது. சிகிச்சைக்குப் பின் கடந்த மார்ச் மாதம் எமானின் எடை 330 கிலோ குறைந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, அபுதாபி சென்று சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் இறந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த புர்ஜீல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
எகிப்து நாட்டில் கெய்ரோ நகரைச் சேர்ந்தவர் எமான். 36 வயது பெண்மணியான இவருக்கு 11 வயதில் உடல்பருமனால் பக்கவாதம் ஏற்பட்டது. அன்று முதல் 25 ஆண்டுகளாக படுக்கையிலேயே நாட்களை கழித்து வந்தார். உடல் எடையும் தொடர்ந்து உயர்ந்து 500 கிலோ ஆகிவிட்டது. இப்போது, உலகிலேயே குண்டான பெண்ணான இவர் தனது உடல் பருமனால் கடும் கஷ்டங்களை அனுபவித்தார்.
இவருக்கு சிகிச்சையளித்து குணப்படுத்த முடியாமல் உலகெங்கும் உள்ள பல மருத்துவர்கள் கைவிட்டுட்டனர். இந்நிலையில், இந்தியாவில் மும்பை நகரில் உள்ள சாய்ஃபீ மருத்துவனை எமானுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது. சிகிச்சைக்குப் பின் கடந்த மார்ச் மாதம் எமானின் எடை 330 கிலோ குறைந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, அபுதாபி சென்று சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் இறந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த புர்ஜீல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.