ஆப்நகரம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை!

TOI Contributor 22 Oct 2016, 11:12 am
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுட்டு்க்கொன்றனர்.
Samayam Tamil yazhpaanam university students shot dead by srilankan police
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை!


இலங்கை காவலர்கள் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் அந்த வழியாக வந்துள்ளனர். சோதனை சாவடியில் இருந்த காவலர்கள் இரண்டு மாணவர்களையும் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முதலில் மாணவர்களை கொலை செய்யவில்லை என்று காவலர்கள் கூறினர். ஆனால் பிரேத பரிசோதனையில் மாணவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் காவலர்கள் கொலை செய்தது உறுதியானது.

இந்த கொலை தொடர்பாக ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் கொலையை தனி அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி