ஆப்நகரம்

முதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் யூசப் சலீம்!

பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக பார்வையற்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியாக பதவியேற்கும் பெருமையை பெற்றுள்ளார்.

Samayam Tamil 13 May 2018, 4:54 pm
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக பார்வையற்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியாக பதவியேற்கும் பெருமையை பெற்றுள்ளார்.
Samayam Tamil cats
முதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் யூசப் சலீம்!


பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் யூசப் சலீம். பிறவியிலேயே பார்வை குறைபாடு உடைய இவர், பாகிஸ்தான் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதினார்.

தேர்வெழுதிய 300 பேரில் யூசப் சலீம் 21வது இடத்தை பிடித்து வெற்றியும் பெற்றார். ஆனால் அவரது பார்வைக் குறைப்பாட்டை காரணம் காட்டி அவருக்கு மாவட்ட சிவில் நீதிபதி பதவி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் யூசப் சலீம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார்,அனைத்து தகுதிகளையும் உடைய ஒருவர் பார்வை குறைபாடு உடைய காரணத்தினாலேயே அவருக்கு நீதிபதி பதவி மறுக்கக்கூடாது என லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவையடுத்து, யூசப் சலீமை மாவட்ட சிவில் நீதிபதியாக நியமிக்க லாகூர் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிபதிகள் தேர்வு கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக நியமிக்கப்படும் பார்வையற்ற நீதிபதி என்ற பெருமையை வழக்கறிஞர் யூசப் சலீம் பெற்றுள்ளார்.

அடுத்த செய்தி