ஆப்நகரம்

புலி வளையத்துக்குள் தவறி விழுந்த இளைஞர்..! இணையத்தை அதிரச் செய்த வீடியோ

அரேபியாவில் உள்ள விலங்கு பூங்காவின் புலி தங்கியிருக்கும் பள்ளத்தில் பார்வையாளர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். அவர் தலையை பதம் பார்க்கும் புலியின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 26 Dec 2019, 8:15 pm
உலகம் முழுக்க வனவிலங்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மிக அபாயமான விலங்குகளை மட்டும் பார்வையாளர்களின் பார்வைக்கு மிகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்படும்.
Samayam Tamil புலி வளையத்துக்குள் தவறி விழுந்த இளைஞர்


எனினும் சில நேரங்களில் ஆர்வத்தினை கட்டுப்படுத்தாத பார்வையாளர்களில் சிலர் ரிஸ்க் எடுப்பதாக கூறி விலங்குகளை ஆச்சுறுத்துவதும், அவைகள் வசிக்கும் இடத்திற்கு அருகே சென்று உணவு வழங்குவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சவூதி அரேபியாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புலிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பார்வையாளர் ஒருவர் தவறி விழுந்து மயங்கியுள்ளார். அதை கண்ட புலி ஒன்று அந்த நபரின் கழுத்தை கடிக்க முயற்சிக்கும் நொடி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

டிக் டாக் பயன்படுத்த தடை..! எச்சரிக்கை விடும் அமெரிக்கா...

அந்த வளையத்தை சுற்றியுள்ள பார்வையாளர்கள் புலியை விரட்டும் நோக்கில் சத்தமிடுகின்றனர். இந்த நிலையில் பூங்காவில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் துப்பாக்கி மூலம் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி மயக்கமடைய செய்துள்ளனர்.

பின்னர் அந்த நபரை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்து, முகம் என படுகாயம் அடைந்த அந்த நபருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி