ஆப்நகரம்

எம்மர்சன் நங்காக்வா - ஜிம்பாப்வே அதிபராக மீண்டும் தேர்வு!

ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எம்மர்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 26 Aug 2018, 5:55 pm
ஹராரே: ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எம்மர்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil Zimbabwe


ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவின் அதிபராக ராபர்ட் முகாபே(94) பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ராணுவப் புரட்சியால், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து இடைக்கால அதிபராக எம்மர்சன் நங்காக்வா பொறுப்பேற்றார்.

இதற்கிடையில் மக்களால் தேர்வு செய்யப்படும் அதிபரே ஆட்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க திபர் சிரில் ரமபோசாவுடன், எம்மர்சன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

அதில் எம்மர்சன் நங்காக்வா, எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டனர். இந்த தேர்தலில் எம்மர்சன் பெருவாரியாக 50% வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த முடிவை எதிர்த்து, நெல்சன் சாமிசாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்தது.

இதன் காரணமாக போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அதிபர் எம்மர்சன் ஒடுக்கினார். பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அரசியலைப்பு சட்ட நீதிமன்றத்தில் நெல்சன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் எம்மர்சனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இந்நிலையில் அந்நாட்டு தலைநகர ஹராரே தேசிய விளையாட்டு திடலில் அதிபர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதி லுக்கே மலாபா பதவிப் பிரமாணம் செய்து வைக்க, எம்மர்சன் நங்காக்வா மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Zimbabwe Emmerson Mnangagwa sworn in as president.

அடுத்த செய்தி