ஆப்நகரம்

முகாபேக்கு பின் மனங்காக்வா: ஜிம்பாப்வேயின் புதிய அத்தியாயம்

ராபர்ட் முகாபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எமர்சன் மனங்காக்வா பொறுப்பேற்க உள்ளார்.

TNN 22 Nov 2017, 6:24 pm
ராபர்ட் முகாபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எமர்சன் மனங்காக்வா பொறுப்பேற்க உள்ளார்.
Samayam Tamil zimbabwes mnangagwa to return as mugabes successor
முகாபேக்கு பின் மனங்காக்வா: ஜிம்பாப்வேயின் புதிய அத்தியாயம்


ஜிம்பாப்வே நாட்டில் ராபர்ட் முகாபே 1980ஆம் ஆண்டு முதல் 37 ஆண்டுகளாக அதிபர் பதவியை ஆக்கிரமித்து வந்தார். தனக்குப் பின் தன் மனைவியை அதிபராக்கி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்று அவர் மீது குற்றம்சாட்டு எழுந்தது. அவரை உடனே பதவிவிலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தினர்.

இதனையடுத்து முகாபேவுக்கு அவரது கட்சியினரே எதிராகக் கிளம்பினர். இதனால் எதிரொலியாக நேற்று முகாபா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் அடுத்த அதிபாரக முகாபே ஆட்சியில் துணை அதிபராக இருந்த எமர்சன் மனங்காக்வா தீர்வாகியுள்ளார். அவர் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) பதவியேற்க இருக்கிறார்.

அடுத்த செய்தி