எங்களுக்கு குறை இருப்பதினால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தோம். இங்கேயே இத்தனை குறைகளா? என செங்கல்பட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேரடியாக அந்த மாவட்டம் முழுவதும் இருக்கும் குறைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நேரடியாக மனுக்களை கொடுப்பதற்கு, இந்த மக்கள் குறை தீர்வு கூட்டம் வழி வகுக்கிறது. குறிப்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அந்தந்த அதிகாரிகள் மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக அவர்களிடமே, அந்த மனு குறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் துறை அலுவலர் மூலம் அதிகாரிகள் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவக்க வேண்டிய மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் சுமார் 10:50 மணியளவிற்கு துவங்கியது. மனு கொடுப்பவருக்கு அத்தாட்சியாக , ரசீதுகள் காலை 9.30 மணி அளவில் போடப்பட்டாலும், மனுக்களை பெறுவதற்கு உயர் மட்ட அதிகாரிகள் யாரும் இல்லாததால் வரிசையில் மக்கள் மணி கணக்கில் காத்துக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலுக்கு பூட்டு; பொதுமக்கள் கடும் அவதி!
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் இன்று நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெறவில்லை. அவருக்கு மாற்றாக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மேனுவல் ராஜ் பொதுமக்களிடம் மனுக்களை சுமார் 10:50 மணி அளவில் பெற துவங்கினார்.
இதனால் காலையிலேயே மனு கொடுக்க வந்த தாய்மார்கள், வயதானவர்கள் மிக துயரத்திற்கு ஆட்பட்டனர். வரிசையில் நிற்க முடியாமல் கீழே அமர்ந்த வயதானவர்கள் மற்றும் தாய்மார்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவக்க வேண்டிய மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் சுமார் 10:50 மணியளவிற்கு துவங்கியது. மனு கொடுப்பவருக்கு அத்தாட்சியாக , ரசீதுகள் காலை 9.30 மணி அளவில் போடப்பட்டாலும், மனுக்களை பெறுவதற்கு உயர் மட்ட அதிகாரிகள் யாரும் இல்லாததால் வரிசையில் மக்கள் மணி கணக்கில் காத்துக் கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலுக்கு பூட்டு; பொதுமக்கள் கடும் அவதி!
குறிப்பாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் இன்று நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெறவில்லை. அவருக்கு மாற்றாக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மேனுவல் ராஜ் பொதுமக்களிடம் மனுக்களை சுமார் 10:50 மணி அளவில் பெற துவங்கினார்.
இதனால் காலையிலேயே மனு கொடுக்க வந்த தாய்மார்கள், வயதானவர்கள் மிக துயரத்திற்கு ஆட்பட்டனர். வரிசையில் நிற்க முடியாமல் கீழே அமர்ந்த வயதானவர்கள் மற்றும் தாய்மார்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை என மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.