ஆப்நகரம்

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கைதாகி பரபரப்பு

ஆருத்ரா கோல்டு நிறுவன நிதி மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 21 Apr 2023, 3:47 pm

ஹைலைட்ஸ்:

  • ஆருத்ரா கோல்ட் நிறுவன நிதி மோசடியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கைது
  • அந்த நிறுவனத்தின் முக்கிய முகவராக அவர் செயல்பட்டு வந்தது அம்பலம்
  • அவரிடம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Arudra gold company financial fraud
ஆருத்ரா கோல்ட் நிறுவனம் சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து 2000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
அந்த புகார் தொடர்பான அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு துறையினர் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது வரை இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் பகுதியில் ஜிகேஎம் சுபமங்களா ஈவண்ட் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் சர்வீசஸ் மற்றும் ஜிகேஎம் டிரேடிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரை மற்றும் முத்து ஆகிய சகோதரர்கள் இருவர் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு முக்கிய முகவர்களாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதிலும் ராஜா செந்தாமரை ஜி கே எம் டிரேடிங் நிதி நிறுவனம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் வரை பணத்தை பொதுமக்களிடம் பெற்று அதனை ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.



ஆருத்ரா கோல்டு நிறுவன முகவராக இருந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா டிரேடிங் நிறுவனத்தில் இயக்குனராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ராஜா செந்தாமரையை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

அதிகரித்து வரும் ஆணவ படுகொலை.. இதற்கான தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கிருஷ்ணகிரியில் பேட்டி..

தொடர்ந்து அவளிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காஞ்சிபுரத்தில் மட்டும் அவர் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் 600 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்றுள்ளார் என அவரிடம் குற்ற பிரிவு காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறுவன நிதி மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரிடம் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி