ஆப்நகரம்

வைபை மூலம் இவிஎம்மில் முறைகேடு; வேட்பாளர் தர்ணா!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைபை மூலம் இணைத்து முறைகேடு செய்து வருவதாக குற்றம்சாட்டி வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Samayam Tamil 19 Apr 2021, 4:39 pm
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளை கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்வாய் கூட்ரோடு ஏசிடி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil வேட்பாளர் பனையூர் பாபு தர்ணா போராட்டம்
வாக்கு எண்ணும் மையத்தில் விசிக வேட்பாளர் பனையூர் பாபு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


வெத்து விளம்பரம் வேண்டாம்; நாராயணசாமி ‘நச்’!

இந்நிலையில் இங்குள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைபை மூலம் இணைத்து முறைகேடு செய்து வருவதாக செய்யூர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபுவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இரு பிரிவினர் மோதல்; வீடுகளை நொறுக்கிய கும்பல்!

இதனை தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதை அறிந்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்