ஆப்நகரம்

மாமல்லபுரம் சுற்றுலாவாசிகள் ஹேப்பி; பொலிவு பெறும் கணேச ரதம்!

மாமல்லபுரம் கணேச ரதத்தை புதிய பொலிவுடன் மாற்றும் பணி நடப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Dec 2022, 10:47 pm
செங்கல்பட்டு மாவட்டம் உள்ள மாமல்லபுரம் சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா நகரமாக திகழ்கிறது. இங்குள்ள பல்லவ மன்னர்களின் கலைத்திறனால் உருவாக்கப்பட்டு இருக்கும் கற்சிற்பங்கள், ஒற்றைக்கல் ரதங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்தபடி இருக்கிறது.
Samayam Tamil ganesh


மேலும் மாமல்லபுரம் என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது அங்குள்ள கணேச ரதம் தான். இது பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட சின்னங்களில் இளஞ்சிவப்பு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள 10 ரதங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த கணேச ரதத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலக பாரம்பரிய சின்னம் என, 1984ம் ஆண்டு அறிவித்தது. இந்த கணேச ரதம் ஒற்றைக்கல் ரதம் என்பது இந்திய கல்வெட்டு கட்டிடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக உள்ளது.

உடனே இதை செய்யணும்; தமிழக மின்சார ஆணையம் அதிரடி!

இந்த கணேச ரதமானது 7ம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மற்றும் அவரது மகன் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த ரதக்கோவிலில் பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்று இருக்கிறது. இது பல்லவர்கள் ஆட்சி காலத்தில் வாதாபியில் இருந்து கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்து என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் மாமல்லபுரம் நகரம் கடற்கரை ஓரத்தில் இருக்கும் நகரப்பகுதியாக திகழ்கிறது. கடல் காற்று வீசுவதனால் கணேச ரதத்தில் உப்பு துகள்கள் படிந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

கோயில்களில் செல்போனுக்கு தடை; ஆடைகளுக்கும் அதிரடி கட்டுப்பாடு!

மாமல்லபுரம் பகுதியில் பலத்த காற்று வீசும்போது காற்றின் மூலம் உப்புத்துகள்கள் கணேச ரதம் முழுவதும் பரவி கோவிலை பெரிய அளவில் பாதிப்பு அடைய செய்து விடுகிறது.

அதே போன்று பறவை எச்சங்கள் மூலமாகவும் ஒருபுறம் கணேச ரதத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை தவிர்க்கும் வகையில் தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை கலந்த தண்ணீர் மூலம் கணேச ரதத்தை சுத்தம் செய்து உப்பு படிமங்களை அகற்றி வருகிறது.

மேலும் தொல்பொருள் ஆய்வுத்துறை வேதியியல் பிரிவு வல்லுநர்கள் தற்போது இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த பணியை மேற்கொள்ள வசதியாக சவுக்கு கம்புகளால் கணேச ரதத்தில் சாரம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆப்பு வைத்த எடப்பாடி; நீதிமன்றம் அதிரடி; அறப்போர் இயக்கத்துக்கு தடாலடி உத்தரவு!

தற்போது அதன் மீது ஏறி இந்த பணியில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் கணேச ரதத்தில் படிந்து இருக்கும் அசுத்தங்களை சுத்தம் செய்து வருகின்றனர். உப்பு படிமங்கள் படிந்து இருக்கும் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக 10 நாட்கள் வரை ரசாயனம் கலந்த தண்ணீரால் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணேச ரதத்தை ரசாயன கலவை கலந்த தண்ணீரால் சுத்தம் செய்யும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு கணேச ரதத்தை கண்டுகளிக்க எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.

இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் அவர்கள் வழக்கம் போல் கணேச ரதத்தை கண்டுகளித்து விட்டு செல்லலாம் என்று, தொல்லியல் துறை தெரிவித்து உள்ளது. இது சுற்றுலா பயணிகளை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்த செய்தி