ஆப்நகரம்

பாமக தலைமையில் புதிய கூட்டணி… அரசியல் களத்தில் பரபரப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Mar 2022, 4:02 pm

ஹைலைட்ஸ்:

  • 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் புதிய கூட்டணி
  • முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பரபரப்பு தகவல்
  • பாமகவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது - ஏ.கே.மூர்த்தி

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ak moorthy
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டமானது பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி கலந்துக்கொண்டார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.மூர்த்தி பேசியதாவது:-

"தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதற்கு உதாரணமாக பல்லாவரம், தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பொறுப்புகளை பெற ஆயிரக்கணக்கானோர் விருப்பமனு வழங்கியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பாமகவின் வளர்ச்சியை அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர். அதனால் தால் பொறுப்புகளுக்கு வர பலரும் நினைக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மருத்துவர் ராமதாஸ்(பாமக) தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்காக கட்சியை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" இவ்வாறு கூறினார்.

பிப்ரவரி மாதம் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கிய பாட்டாளி மக்கள் கட்சி மாநகராட்சிகளில் 1.42%, நகராட்சிகளில் 1.64%, பேரூராட்சிகளில் 1.56% வாக்குகள் பெற்றுள்ளது. பெரும்பாலான இடங்களில் திமுகவின் தோல்விக்கு பாட்டாளி மக்கள் கட்சி காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியை வன்னிய சங்க மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் கைப்பற்றி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இப்படி, நாள்தோறும் அரசியல் நகர்வுகளை பாட்டாளி மக்கள் கட்சி துணிந்து செய்து வரும் நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி புதிய கூட்டணி என்ற நிலைப்பாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி