ஆப்நகரம்

அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு; மர்ம நபர்களால் பரபரப்பு; காஞ்சியில் விசிக சாலை மறியல்!

காஞ்சிபுரத்தில் மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புள்ள அம்பேத்கார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 12 Aug 2022, 1:50 pm

ஹைலைட்ஸ்:

  • அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவித்துண்டு அணிவித்தனர்
  • விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல்
  • ஏராளமான போலீஸ் குறிக்கப்பட்டதால் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அம்பேத்கார் சிலைக்கு  மர்ம நபர்கள் காவி துண்டு
அம்பேத்கார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் வாயில் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர்.
அதனையடுத்து அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட செய்தி அறிந்து ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மின்சார வாரிய அலுவலகம் முன்பு குவிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் என்ன சாராயம் காய்ச்சியா குடிச்சார்? அரசு விக்கிறததான குடிச்சார்- கணவனுக்காக மனைவி போலீசாருடன் வாக்குவாதம்!

மேலும் இது குறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்ட டி.எஸ்.பி ஜூலியர் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு காவி உடை போர்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்த நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் மின்சார வாரிய அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலை சிறுத்தைக் கட்சியினர் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர். அதேபோல் ஏதேனும் அசாம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் ஏராளமான போலீசாரும் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி