செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கோவளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாபெரும் படகு போட்டி மற்றும் 5000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவினை கோவளம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாடு செய்து இருந்தார்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட செயலருமான தா. மோ. அன்பரசன் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இறுதி சுற்று படகு போட்டியினை கொடி அசைத்து துவக்கி வைத்ததுடன், போட்டியை நேரில் பார்த்தார். படகு போட்டியை காண பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் கடற்கரையில் குவிந்து, போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆரவாரமாக உற்சாகம் அளித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் போட்டியை கண்டு ரசித்தனர்.
‘பாஜகவினர் அதில் கில்லாடிகள்..’ - கே.பாலகிருஷ்ணன் பொளேர்.!
கோவளத்தில் நடைபெற்ற படகு போட்டியில் கானத்தூர் ரெட்டிகுப்பம் அணியினர் முதலிடத்தையும், கோவளம் மீனவ குப்பம் அணியினர் இரண்டாவது இடத்தையும், செம்மஞ்சேரி குப்பம் அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். போட்டியில் பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு பைபர் படகும், அந்த படகில் சென்ற 4 வீரர்களுக்கும் தலா 1 சவரன் தங்க சங்கிலியும் வழங்கப்பட்டது.
மேலும், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு படகுக்கு பயன்படுத்தும் எஞ்சினும், மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு சிறிய படகும் பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளையும் வழங்கி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; மக்கள் நலனில் என்றும் அக்கறையுடன் செயல்படுவது தமிழக அரசு என கூறினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள், திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் என் பிறந்தநாளை சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இது எங்கள் மேல் இருக்க கூடிய அன்பை காட்டும் விதமாக இருக்கிறது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஒன்றிய சேர்மன் எஸ் ஆர் எல். இதயவர்மன் , பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ், தலைமை பொது குழு உறுப்பினர்கள் மாநில மாவட்ட அணி பொறுப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட செயலருமான தா. மோ. அன்பரசன் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இறுதி சுற்று படகு போட்டியினை கொடி அசைத்து துவக்கி வைத்ததுடன், போட்டியை நேரில் பார்த்தார்.
‘பாஜகவினர் அதில் கில்லாடிகள்..’ - கே.பாலகிருஷ்ணன் பொளேர்.!
கோவளத்தில் நடைபெற்ற படகு போட்டியில் கானத்தூர் ரெட்டிகுப்பம் அணியினர் முதலிடத்தையும், கோவளம் மீனவ குப்பம் அணியினர் இரண்டாவது இடத்தையும், செம்மஞ்சேரி குப்பம் அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். போட்டியில் பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஒரு பைபர் படகும், அந்த படகில் சென்ற 4 வீரர்களுக்கும் தலா 1 சவரன் தங்க சங்கிலியும் வழங்கப்பட்டது.
மேலும், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு படகுக்கு பயன்படுத்தும் எஞ்சினும், மூன்றாம் இடத்தை பிடித்தவர்களுக்கு சிறிய படகும் பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளையும் வழங்கி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; மக்கள் நலனில் என்றும் அக்கறையுடன் செயல்படுவது தமிழக அரசு என கூறினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள், திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் என் பிறந்தநாளை சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இது எங்கள் மேல் இருக்க கூடிய அன்பை காட்டும் விதமாக இருக்கிறது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஒன்றிய சேர்மன் எஸ் ஆர் எல். இதயவர்மன் , பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ், தலைமை பொது குழு உறுப்பினர்கள் மாநில மாவட்ட அணி பொறுப்பாளர்கள், மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.