ஆப்நகரம்

கூவத்தூர் பண்ணை வீட்டில் ரூம் பாய் பாலியல் தொல்லை; செல்போனில் பெண்களின் குளியல் வீடியோ.. விசாரணையில் ஷாக் தகவல்கள்!

கூவத்தூர் அருகில் உள்ள பண்ணை வீட்டில் காதல் ஜோடியினர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ரூம் பாய்க்கு தர்ம அடி கொடுத்து, விருந்தினர்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து அறைகளிலும் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்து பார்த்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 22 May 2023, 10:56 am

ஹைலைட்ஸ்:

  • அறைக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ரூம் பாய்க்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த விருந்தினர்கள்
  • ரூம் பாய் அனைத்து அறைகளிலும் பெண்கள் குளிக்கும் காட்சியை வீடியோ எடுத்து ரசித்து பார்த்தது விசாரணையில் அம்பலம்
  • விருந்தினர்கள் தாக்கியதில் காயமடைந்த ரூம் பாய் சுபாஷ் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதி
  • இந்த பண்ணை வீட்டில் தங்கிய வேறு பெண்களிடம் இவர் இதுபோல் இரவு நேரத்தில் அறைகளில் அத்துமீறி நடந்து கொண்டாரா என விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பண்ணை வீடு
கூவத்தூர் அருகில் உள்ள பண்ணை வீட்டில் காதல் ஜோடியினர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ரூம் பாய்க்கு தர்ம அடி கொடுத்து விருந்தினர்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அனைத்து அறைகளிலும் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்து பார்த்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கூவத்தூர் பண்ணை வீட்டில் ரூம் பாய் பாலியல் தொல்லை:

கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்துள்ள பரமன்கேனி பகுதியில் (பேர்ல் பீச் எனும் பெயரில்) சினிமா பட நடிகையின் (காதல் பட சந்தியா) கணவர் வெங்கடேசன் என்பவர் ஒரு பண்ணை வீடு நடத்தி வருகிறார். இந்த பண்ணை வீடுகளில் நீச்சல் குளத்துடன் வில்லா வீடுகள் உள்ளன.
சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த பலர் வந்து இந்த வில்லா வீடுகளில் தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அன்று (சனி, ஞாயிறு இரு தினங்கள்) இந்த வில்லா வீடுகளில் தங்குவதற்காக சென்னை கே.கே. நகர் பகுதியை சேந்த இன்டீரியர் டெகரேட் காண்டிராக்டர் ராமச்சந்திரன் (வயது 25) என்பவர் தனது நட்பு வட்டாரத்தை சேர்ந்த நான்கு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்குவதற்காக 3 (வில்லா) அறைகள் பதிவு செய்து மொத்தம் 8 பேர் வந்து தங்கினர். ஒரு அறையில் ராமச்சந்திரன் (வயது 25) அவரது காதலி சோனாலிக்கா (வயது 22) ஆகியோர் தங்கினர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் அந்த பண்ணை வீட்டில் ரூம் பாயாக வேலை செய்யும் சீக்கினாங்குப்பம் பகுதியை சோந்த சுபாஷ் (வயது 23) என்பவர் ராமச்சந்திரன் தங்கியுள்ள அறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்று சுத்தம் செய்து கொடுத்துள்ளார். இவர்கள் தங்கியுள்ள அறையில் உள் பக்கம் தாழிட்டாலும், வெளியே திறக்கும் வசதி கொண்ட தாழ்ப்பாள் வசதி கொண்டவை கொண்ட அறையாகும்.


தர்ம அடி:

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (நேற்று) இரவன்று ராமச்சந்திரனும், சோனாலிகாவும் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும்போது ரூம்பாய் சுபாஷ் அந்த அறைக்குள் புகுந்து பெட்டில் தூங்கி கொண்டிருந்த சோனாலியிடம் காதலன் போல் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். தனது காதலன் தன்னிடம் இது மாதிரி ஈடுபடமாட்டரே என சந்தேகமடைந்து, ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்த (சோனாலி) அந்த பெண் சுதாரித்து எழுந்து அறையின் லைட் போட்டுள்ளார். அப்போது ராமு அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு தன்னிடம் யார் தவறாக நடந்து கொண்டது என சந்தேகமடைந்து, கட்டில் அடியில் பார்த்தபோது சுபாஷ் மறைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அப்போது அயர்ந்து தூக்கத்தில் இருந்து எழுந்த ராமச்சந்திரனிடம், நடந்த சம்பவத்தை சோனாலி கூறவே ராமச்சந்திரன், சுபாசை வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற சுபாஷின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விடுதியில் தங்கி இருந்தவர்களை தாக்கினர்.

ஜாதி பெயரை சொல்லி அராஜகம்.. திமுக ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறல்.. தலைமைக்கு சென்ற ரிப்போர்ட்!

செல்போனில் பெண்களின் குளியல் வீடியோ:

சுதாரித்துக் கொண்ட ராமச்சந்திரன் மற்றும் விருந்தினர்கள் கூவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தர்மடி கொடுத்ததால் காயமடைந்த நிலையில் காணப்பட்ட சுபாசை கைது செய்து, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். சுபாஷை தாக்கியதால் ராமச்சந்திரன் உட்பட நான்கு பேர் மீது சுபாஷின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர்

இந்நிலையில் சுபாசின் செல்போனை வாங்கி பார்த்து பரிசோதனை செய்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியான பல தகவல்கள் கிடைத்தன. அவர் அந்த பண்ணை வீட்டில் (ரூம்) தங்கும் பெண்கள் குளிக்கும்போதும், உடைகள் மாற்றும்போதும் வீடியோ எடுத்து ரசித்த காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. விருந்தினர்கள் தாக்கியதால் மருத்துவ சிகிச்சையில் சுபாஷ் உள்ளதால் காயம் குணமடைந்து அவரிடம் விசாரித்தால், மேலும் இந்த பண்ணை வீட்டில் தங்கிய வேறு பெண்களிடம் இவர் இதுபோல் இரவு நேரத்தில் அறைகளில் அத்துமீறி நுழைந்து காதலன் போல் இருட்டில் தவறாக நடந்து கொண்டாரா என பல தகவல்கள் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி