ஆப்நகரம்

தமிழ் புத்தாண்டு: காஞ்சிபுரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டையொட்டி காஞ்சிபுரம் கோவிலில் காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 14 Apr 2023, 12:23 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழ் புத்தாண்டையொட்டி உலக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம், காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் குவியும் பக்தர்கள்
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
  • பக்தர்களின் வருகையொட்டி பல்வேறு தடுப்புகள் அமைத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Kanchipuram
Kanchipuram
தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் 11,900 ஏக்கரில் எள் பயிர் சாகுபடி மும்முரம்: விவசாயிகள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்
அதையொட்டி காலை முதலே பொது மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி தங்களது குடும்பத்தாருடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்திப்பெற்றதும், மகா சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை யொட்டி காமாட்சியம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாளை தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் குவிந்து வண்ணம் இருந்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை ஒட்டி காலை முதலே காமாட்சி அம்பாளை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாடைகள் உடுத்தி தங்களது குடும்பத்தாருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்களின் வருகையொட்டி பல்வேறு தடுப்புகள் அமைத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு வழிபாடு
அதேபோல் காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற கோவில்களான ஏகாம்பரநாதர் திருக்கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கேரளா மாநிலம் இடுக்கியில் 108 வயதில் கல்வி கற்கும் மூதாட்டி-தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேலும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்திப்பெற்ற கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் படையெடுத்து வருகின்றதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் வளாகம் முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டும், காஞ்சிபுரம் மாநகரிலுள்ள போக்குவரத்து நெரிசை சீர் செய்யும் பணியில் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி