ஆப்நகரம்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு!

காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 22 Mar 2023, 2:06 pm
காஞ்சிபுரம் வளத்தோட்டத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது 7 பேர் உயிரிழந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil fire accident


காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனப்படும் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.

இங்கு திருவிழாவிற்கான பட்டாசுகள் உள்ளிட்டவை தயாரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் இந்த குடோனில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில் பட்டாசு குடோனில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்தானது ஏற்பட்டது.
பாஜக குறி வைக்கும் தொகுதிகள்: எல்லாம் சரியா நடந்தா 39 இல் 10 உறுதியாம்!
இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் இந்த வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது வரையில் இரு பெண் உட்பட ஏழு பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள்: தட்டிக் கழிக்கிறதா மத்திய அரசு?
மேலும் தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வெடி விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன்,காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர் எம்.சுதார்கர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி