ஆப்நகரம்

ஸ்ரீபெரும்புதூர்: கம்பி எண்ணும் காதலன்... சிக்க வைத்த காதலி... 6 ஆண்டு காதல் சிறையில் முடிந்தது!

ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 10 May 2023, 4:33 pm

ஹைலைட்ஸ்:

  • இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி மோசடி
  • இளைஞரை கைது செய்து போலீசார் நடவடிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil kanchipuram youth arrest
kanchipuram youth arrest
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (26). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரும் ஒரகடம் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் சுமித்ராவும் (24) கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர்

மேலும், அவ்வப்போது இருவரும் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதகளுக்கு முன்பு பிரிந்து உள்ளனர். இதன் காரணமாக காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அசோகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதாக சுமித்ராவிற்கு தகவல் சென்றுள்ளது.

இதனையடுத்து, அசோகன் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்யப்போவதை சுமித்ராவிற்கு தெரியவந்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். தன்னை போல வேறு பெண்கள் பாதிக்கப்பட கூடாது என எண்ணிய சுமித்ரா, தான் காதலித்த அசோகனுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்தார்.
காஞ்சிபுரத்தில் 40 கோடி மோசடி.. 2 காவலர்கள் தலைமறைவு.. மொத்த குடும்பமும் கைது!
இளைஞர் கைது - சிறையில் அடைப்பு

இதையடுத்து, சுமித்ரா ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோகன் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். சுமித்ரா அளித்த புகாரின் பேரில் போலீசார் அசோகனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சுமித்ராவை, அந்த இளைஞர் ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, வேறு பெண்ணை திருமணம் செய்ய இருந்த அசோகனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட அசோகன் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 6 ஆண்டுகளாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனை, அவரது காதலியே கம்பி எண்ண வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி