ஆப்நகரம்

ஆன்லைன் ரம்மியால் 14 வயது மாணவன் மரணம்... தற்கொலையா?

பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு ஆன்லைன் ரம்மியிலும் இறங்கியுள்ளார். இதன் விளைவாக தொடர்ந்து பணத்தை இழக்கவே, தாயாரிடமும் வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2020, 11:33 am
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா கருமன்கூடல் பகுதியில் தனது கணவரின் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் சஜன் அருகிலுள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
Samayam Tamil online rummy


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் பூட்டிய நிலையில் கழிந்த 5 மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. தனது தாயாருக்கு தந்தை வாங்கி கொடுத்த செல்போணில் அவ்வப்போது ஆண் லைன் விளையாட்டுகளை விளையாடி வந்த நிலையில் பப்ஜி கேமுக்கு அடிமையாகியுள்ளார்.

பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு ஆன்லைன் ரம்மியிலும் இறங்கியுள்ளார். இதன் விளைவாக தொடர்ந்து பணத்தை இழக்கவே, தாயாரிடமும் வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மகன் குறித்து தனது கணவரிடம் கீதா புகார் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து தந்தை செல்போனில் மகன் சஜனை கண்டித்துள்ளார். இதனால் தனது தாயாரிடம் தகறாது செய்த சஜன் தனது செல்போனை வீட்டு முன் எறிந்து உடைத்து விட்டு வெளியேறினார். எல்லோரும் தேடியதையடுத்து நேற்று வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போதும் பணமும் புதிய செல்போணும் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், தாய் கீதா இதனை கண்டிப்புடன் மறுக்கவே மீண்டும் வீட்டிலிருந்து வெளியே சென்ற சஜன் நேற்றிரவு அருகில் இருந்த வாழை தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார்.

அமைச்சரின் அண்ணன் மகனை வளைத்த திமுக

அதை கண்ட விவசாயிகள், சஜனை மருத்துவமனையில் அனுமதித்ததோடு பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். திங்கள்சந்தை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மைண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறு குழந்தை கவனிப்பாரின்றி தாயாரின் செல் போணில் பப்ஜி கேம் விளையாடி ஆண் லைன் ரம்மியில் பணத்தையும் இழந்து வாழை தோப்பில் உயிரை மாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி