ஆப்நகரம்

வரலாறு படைத்த இளம்பெண்; 100 ஆண்டுகளில் முதல் சாதனை!

கடந்த 100 ஆண்டுகளில் முதல் சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்துள்ள இளம்பெண்ணுக்கு வாழ்த்து மழை பொழிந்தபடி உள்ளது.

Samayam Tamil 22 Feb 2022, 4:13 pm
தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.
Samayam Tamil கவுசி
கவுசி



மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர்.

நகராட்சியை கைப்பற்றும் பாஜக?; திமுக, அதிமுக செம ஷாக்!

இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று 22ம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையானது, தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நாகர்கோவில் கடந்த 100 ஆண்டுகளாக நகராட்சியாக இருந்து வந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக நாகர்கோவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

வாக்குப்பெட்டி பூட்டு உடைப்பு; பீதியில் உறைந்த வேட்பாளர்கள்!

இச்சூழலில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் மொத்தம் இருக்கும் 52 வார்டுகளில் 356 வேட்பாளர்கள் போட்டியிட்டியிட்ட நிலையில் 60.94 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நாகர்கோவில் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 21 வயதான இளம்பெண் கவுசி வெற்றி பெற்று உள்ளார். இதையடுத்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி