ஆப்நகரம்

மிளா வேட்டை.. 4 பேருக்கு 1 லட்சம் அபராதம்.. வனத்துறை அதிரடி!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கடமான் (மிளா) இறைச்சி வைத்திருந்த நான்கு நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Oct 2022, 11:06 am
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுவது வாடிக்கையாகி வருகிறது. இதேபோல் காட்டுக்குள் சென்று விலங்குகளை வேட்டையாடும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil 4 பேருக்கு 1 லட்சம் அபராதம்


இந்நிலையில் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட எருமை சாடி மற்றும் மேக்கரை பகுதிகளில் வனச்சரக அலுவலர் சுரேஷ், மேக்கரை பீட் வனக்காப்பாளர் அம்பலவாணன், முருகேசன், வெள்ளக்கல் தேறி பீட் வனக்காப்பாளர் ராஜா, பண்பொழி பிட் வனக்காப்பாளர் முத்துச்சாமி, வேட்டை தடுப்பு காவலர் ஆறுமுகம், ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் எருமைசாடி மற்றும் மேக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொடர் விடுமுறை எதிரொலி; குடும்பம் குடும்பமாக குவியும் சுற்றுலா பயணிகள்.. நிரம்பி வழியும் ஏற்காடு!

அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திருமலாபுரம் பகுதியை சார்ந்த காசிராஜன், மேக்கரை பகுதியில் சார்ந்த ஆறுமுகம், இசக்கிமுத்து, ஐயப்பன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதனை செய்ததில் எருமை சாடி பகுதியில் செந்நாய் கடித்து இறந்த கடாமான் (மிளா) இறைச்சி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நான்கு பேருக்கும் தலா ரூ.25,000 என ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி