ஆப்நகரம்

கடலுக்குள் சென்ற மாடி வீடு; மீனவர் குடும்பத்தின் கதி?

கடற்கரையில் இருந்த மாடி வீட்டை கடல் அலை இழுத்து சென்றது.

Samayam Tamil 28 Jun 2022, 4:35 pm
கேரளாவில் தற்போது கடந்த சில தினங்களாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் உள்ள கடலோர மீனவர்களின் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது ஆலப்புழா மாவட்டத்திலுள்ள உத்தமர் சேரி எனும் கடற்கரை கிராமத்தில் தொடர்ந்து கடல் அலை சீற்றத்துடனும், மிகவும் ஆக்ரோஷமாகவும் காணப்படுகிறது.

இதனால் கடற்கரை அருகே அமைந்து இருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சின்னா என்ற மீனவர் ஒருவரின் வீடு கடல் அலை சிற்றத்தின் காரணமாக முற்றிலுமாக சரிந்து விழுந்தது.



கடந்த மே மாதம் இதே போன்று வேகமாக வீசிய அலைகளால் சின்னாவின் வீட்டில் அத்திவாரம் அழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போதைய சீற்றமான அலைகளால் அவரின் வீடு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்கள் ஷாக்; தமிழக அரசு போட்ட உத்தரவு!

முன்னதாக வேறு வழியில்லாமல் சின்னா தனது குடும்பத்தோடு வேறு இடத்திற்கு தற்காலிகமாக குடிபெயர்ந்து இருந்தார். இதனால் அவரது வீட்டில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் கடல் சீற்ரம் அதிகமாக காணப்படுகிறது. யாருக்கு என்ன தீங்கு ஏற்படுமோ? என நாங்கள் அஞ்சிக்கொண்டு இருந்தோம். இந்த சூழலில் சின்னா என்பவரது வீடு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது.

இதனால் சின்னா பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறது. உயிர் சேதம் எதுவும் ஏற்படா விட்டாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு கனிவு கூர்ந்து சின்னாவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

அடுத்த செய்தி