ஆப்நகரம்

எப்பா... வந்து வண்டில ஏறு... அவரு விமானம் ஏறிட்டாருங்க; அதிகாரிகளை பீதியில் ஆழ்த்திய நோயாளி குடும்பத்தினர்!

கொரோனா நோயாளி வீட்டுக்கு வந்த சுகாதார அதிகாரிகள் ‘எப்பா.. வந்து வண்டியில ஏறுன்னு சொல்ல..அவரு ஏற்கனவே விமானத்துல ஏறிட்டாருங்கன்னு.. வீட்டில் உள்ளவங்க சொல்ல...சுகாதார துறை அதிகாரிகள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

Samayam Tamil 19 Jan 2022, 2:59 pm
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் 45 வயது ஆசாமி. இந்த மாதம் வெளிநாடு செல்வதற்காக விமான டிக்கெட் எடுத்து வைத்திருந்தார். விமான நிலையம் மற்றும் அவர் செல்லும் நாட்டில் காட்டுவதற்காக கொரோனா தொற்று இல்லாத சான்று அவருக்கு தேவைப்பட்டது.
Samayam Tamil அவசர சிகிச்சை பிரிவு
அவசர சிகிச்சை பிரிவு



எனவே அந்த ஆசாமி கடந்த 2 தினங்களுக்கு முன்பாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அந்த ஆசாமிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

ராஜேந்திர பாலாஜி புது ரூட்டு; இனி தான்.. ஆட்டமே ஆரம்பம்!

இதுதொடர்பாக அவரது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குறிப்பிட்ட ஆசாமியின் வீட்டுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்தனர். ஆனால் அந்த ஆசாமி வீட்டில் இல்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறும்போது ‘ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வந்தது.

என்னை சந்தித்தவர்கள் ஜாக்கிரதை; அமைச்சர் அதிரடி தகவல்!

ஆனால் அவர் தனியார் பரிசோதனை மையத்தில் மீண்டும் பரிசோதனை செய்தார். அப்போது கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. எனவே அந்த சான்றை பெற்று வெளிநாடு சென்றுவிட்டார்’ என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், உண்மையிலேயே அவர் வெளிநாடு சென்றுவிட்டாரா? அல்லது பயம் காரணமாக தலைமறைவாக இருந்து வருகிறாரா? என்று விசாரிக்கின்றனர். இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த செய்தி