ஆப்நகரம்

இளம் பெண்ணிடம் சில்மிஷம்... குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது..!

இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பத்மநாபபுரம் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2020, 8:03 pm
குமரி அருகே கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததோடு, சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் குமார்.
Samayam Tamil குமரியில் அதிமுக முன்னாள் நகர செயலாளர் கைது


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் குமார். அதிமுக முன்னாள் நகர செயலாளரான இவருக்கு அம்ருதா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் சொந்தமான கடை ஒன்றை தக்கலை பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நடத்தி வருகிறார்.

இக்கடையில் திங்கள் நகர் அருகே நெய்யூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (21) என்ற இளம்பெண் நேற்று முதல் பணிக்கு வந்தார். இந்நிலையில் அவர் கடையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குமார் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதை அவர் எதிர்த்த போது கொலைமிரட்டல் விடுத்ததாகவும் மகேஸ்வரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு வன்கொடுமை..! மகன் கதறல், கணவன் வேடிக்கை...

அதன் பேரில் குமாரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவின் முன்னாள் பத்மநாபபுரம் நகர செயலாளரான குமார் சிறிது காலம் அமமுக கட்சியில் சேர்ந்து செயல்பட்ட பின், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி