ஆப்நகரம்

பிறந்த நாள் கொண்டாடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து சாணி அபிஷேகம்..!

கன்னியாகுமரி அருகே குடிபோதையில் முட்டை, தக்காளி வீசி மாட்டு சாணி அபிஷேகம் செய்து பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர்.

Samayam Tamil 10 Jul 2020, 5:43 pm
பிறந்த நாள் கொண்டாட்டம் வித்தியாசமாக பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஒருசில ரவுடிகள் பட்டா கத்தி கொண்டு கேக் வெட்டி சக ரவுடிகளுடன் கொண்டாடுவதும், சிலர் அரசு வாகனங்கள் முன் நின்று டிக்டாக் செய்து கொண்டாடுவது என வித விதமாக பிறந்த நாள் கொண்டாடி அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
Samayam Tamil kanyakumari birthday celebration


கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே பரம்பை என்னும் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றிணைந்து அந்த பகுதியை சேர்ந்த அவர்களின் நண்பரான பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் பெபிஸ் (20) என்பவரின் பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளனர்.

முதலில் கேக் வெட்டி கொண்டாடியவர்கள், இரவு குடி போதையில் திடீரென பிறந்த நாள் கொண்டாடிய இளைஞரை பிடித்து வந்து அருகில் உள்ள தோப்பில் மின்கம்பத்தில் கட்டி வைத்ததோடு அவரது உடலில் தயிர், முட்டை, தக்காளி, போன்றவற்றை அடித்து பூசுவதும் மாட்டு சாணி கரைசலை தலையில் ஊற்றியும் கொண்டாடியுள்ளனர்.


ஒரே பாணியில் அடுத்தடுத்து திருட்டு... பீதியில் மக்கள்!

இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த வினோத விபரீத பிறந்த நாள் கொண்டாட்டம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இது போன்று சில இளைஞர்கள் ஒன்று கூடி விபரீதமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் பிறந்த நாள் கொண்டாடியது அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி