ஆப்நகரம்

சிறுமி மீது கைவைத்துவிட்டு தலைமறைவான முன்னாள் எம்எல்ஏ கைது!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீஸார், உவரியில் கைது செய்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

Samayam Tamil 30 Jul 2020, 12:03 am
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் இதுதொடர்பாக பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் அளித்தனர் இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்து அந்த வாலிபரிடம் இருந்து சிறுமியை மீட்டதாக தெரிகிறது.
Samayam Tamil mla


இதனையடுத்து, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளிடம் சிறுமி ஆஜர்படுத்தப்பட்டார். அவர்களிடம் அந்த சிறுமி, " கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், இதற்கு தனது தாயே உடந்தையாக இருந்ததாகவும்" வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, அதிகாரிகள் சார்பில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில், நாஞ்சில் முருகேசன் உட்பட 5 பேர் மீது போலீசார் போக்ஸோ உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து , 5 தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தேடி வந்தனர்.

15 வயசு சிறுமி பலநாள் பலாத்காரம்... எக்ஸ் எம்எல்ஏ அட்டூழியம்..!

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீசார், நெல்லை மாவட்டம் உவரியில் வைத்து கைது செய்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீசார் அவரை அழைத்து சென்றனர்.

முன்னதாக,இவ்வழக்கில் தொடர்புடைய குளத்தூரை சேர்ந்த பாலு (66), கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார் (43), கார்த்திக் (23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதோடு சிறுமியை பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்தியதாக சிறுமியின் தாயை நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி