ஆப்நகரம்

மனைவி சண்டை போட்டு பிள்ளைகளோடு வெளியேறிய நிலையில், கணவன் தற்கொலை: குமரியில் பெரும் சோகம்!

செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை.

Samayam Tamil 10 Sep 2021, 7:04 pm
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் அகஸ்தியர் காலனி பகுதியை சேர்ந்தவர் 28 வயதான மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவர் மனைவி பூர்ணிமா.
Samayam Tamil மனைவி சண்டை போட்டு பிள்ளைகளோடு வெளியேறிய நிலையில், கணவன் தற்கொலை: குமரியில் பெரும் சோகம்!


இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த சூழலில், பூர்ணிமா அகஸ்தியர் காலனியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனால் மணிகண்டன் கடந்த ஒரு வாரமாக சோகமாக காணப்பட்டுள்ளார்.

1000 ரூபாய் லஞ்சத்துக்கு ஆசைப்பட்ட விஏஓவுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்!
இந்நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற மணிகண்டன், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நள்ளிரவு வீட்டில் உள்ளவர்கள் மணிகண்டனை பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி