ஆப்நகரம்

ரேஷன் கார்டு வேணுமா? அப்போ எடு ஆயிரத்தை... வெளியான வருவாய் ஆய்வாளரின் பகீர் ஆடியோ.. குமரியில் பரபரப்பு!

தோவாளை தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் லஞ்சம் கேட்கும் வருவாய் ஆய்வாளரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Jun 2022, 2:16 pm

ஹைலைட்ஸ்:

  • தோவாளை தாலுகா பகுதியில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் லஞ்சம்
  • லஞ்சம் கேட்டு வருவாய் ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு
  • வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா உத்தரவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகா பகுதியில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் லஞ்சம் கேட்டு வருவாய் ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தோவாளை வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதியதாக ரேஷன் கார்டுகள் அண்மையில் வழக்கப்பட்டன. 180க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் இவ்வாறு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரேஷன் கார்டு பெற்றுக் கொண்டவர்களை தொடர்பு கொண்டு வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பயனாளி ஒருவருடன் பேசிய ஆடியோ சமூக வலைதங்களில் வைரலானது. அதில் பயனாளி ரூ.100 போதுமா சார் என்று கேட்க, மறுமுனையில் பேசிய அதிகாரி, கூடுதலாக ஒரு சைபர் சேர்த்து ஆயிரம் ரூபாயாக கொடு என்று கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.

"மாணவரே வேண்டாமே போதை".. கலெக்டருடன் கைக்கோர்த்த மாணவர்கள்..!

இவ்விவகாரம் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி