ஆப்நகரம்

காற்றில் தடுமாறிக் கடலில் விழுந்த மீனவர்... உடல் தேடும் பணி தீவிரம்

உடல் கூட கிடைக்காமல் இறக்கும் ஏராளமான மீணவர்களில் ஒருவராக இந்த மீனவரும் இறந்து போவாரோ என்ற கவலை அப்பகுதி மக்களைச் சூழந்துள்ளது.

Samayam Tamil 15 Jun 2020, 11:18 pm
இறப்போம் என்று தெரிந்தும் துணிந்து செல்லும் ராணுவ வீரர் ஒருவேளை போரில் இறக்க நேரிட்டால், அவர் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. ஆனால், இறப்போம் என்று தெரிந்தும் கடலுக்குச் சென்று மீனவன் இறக்க நேரிட்டால் அப்படி ஒரு உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை என்பார் எழுத்தாளர் வறீதையா கான்ஸ்டண்டைன்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்த நிலை இன்று வரையிலும் மாறவில்லை. இந்நிலையில், கன்னியாகுமரியில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சூறாவளி காற்று காரணமாக கடலில் தவறி விழுந்து மாயமானார். அவர் உடல் கிடைக்கவில்லை

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 45 நாள் தடை காலத்திற்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் நேற்று முதல் கன்னியாகுமரி கடல் பகுதியில் கடுமையான சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் திணறினர்.

இதனிடையே நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சூறாவளி காற்று காரணமாக கடலில் தவறி விழுந்து மாயமானார். அவர் இன்னும் கிடைக்கவில்லை. உடல் கூட கிடைக்காமல் இறக்கும் ஏராளமான மீணவர்களில் ஒருவராக இந்த மீனவரும் இறந்து போவாரோ என்ற கவலை அப்பகுதி மக்களைச் சூழந்துள்ளது.

அடுத்த செய்தி