ஆப்நகரம்

மூன்று பேர் கொலை வழக்கில் ஆறாண்டாக தேடப்பட்டு வந்தவர் கைது!!

நாகர்கோவில் அருகே தாய், தந்தை, மகள் என மூன்று பேரை கொலை செய்த வழக்கில் ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த சுரேஷ் என்பவரை குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசார், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

Samayam Tamil 2 Sep 2020, 9:15 pm
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகில் உள்ள வெள்ளமடம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (57). இவர் திருநெல்வேலியில் மத்திய சுங்கத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (52). குழந்தை இல்லாததால் அபிஸ்ரீ (13) என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.
Samayam Tamil nagarcoil


இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி வீட்டுத் தோட்டத்தில் வசந்தியும், அபிஸ்ரீயும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அன்று முதல் சுப்பையாவையும் காணவில்லை. 26 ஆம் தேதி முப்பந்தல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், 2015 இல் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

சுப்பையாவின் வீட்டிலிருந்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த டேனியல் மகன் மெரின் ராஜேந்திரன் என்பவர் 3 பேரையும் கொலை செய்தது தெரியவந்தது.

கன்னியாகுமரி: தற்கொலை மிரட்டல் வீடியோ: கைது செய்யாமல் விட்ட போலீஸ்

அதைத் தொடர்ந்து மெரின் ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இந்த கொலை சம்பவத்தில் உதவி செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இதற்கிடையே, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

அவர் குறித்த விபரங்களை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து சுரேஷ், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் கிடைத்தது.

ஊர் பெண்களை மிரட்டிய 12 நீள மலைப்பாம்பை துணிந்து பிடித்த வாலிபர்கள்!

இதையடுத்து உஷாரான குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசார், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுரேஷ் இன்று அதிகாலை வந்திறங்கியபோது, அவரை சுற்றி வளைத்து கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

அடுத்த செய்தி