ஆப்நகரம்

பைக் மோதி முதியவர் உயிரிழப்பு... வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

Samayam Tamil 22 Jan 2022, 1:06 pm

ஹைலைட்ஸ்:

  • சாலையில் நடந்து சென்ற முதியவர்
  • இருசக்கர வாகனம் மோதி விபத்து
  • சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் நடந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே முதியவர் பலியான நிலையில், விபத்து குறித்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் நகைக் கடையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் என்பவர், நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, கடையில் இருந்து நடந்து சென்று சாலையை கடக்க முயன்றுள்ளார்.


அப்போது சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பத்மநாபன் மீது மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பத்மநாபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் ஒடி சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

வேகத்துக்கு வேகத்தடை போட்ட பொதுமக்கள்… மிரண்டு போன அதிகாரிகள்!

அவரை உறவினர்கள் மற்றும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி