ஆப்நகரம்

ஊரடங்கால் இவங்களுக்கு உணவில்லையே? பசி தீர்க்க ஓடிவந்த நிர்வாகி!

நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவின்றி திரியும் நாய்களுக்கு தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவர் உணவளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 May 2020, 1:25 pm
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. விரைவில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரவுள்ள நிலையில், உணவகங்கள் முழு வீச்சில் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பசியை பற்றி எண்ணிக் கொண்டிருக்கையில், இங்கு ஒருவர் வாயில்லா ஜீவன்களின் பசியை உணர்ந்து உதவிக்கரம் நீட்ட ஓடி வந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உணவின்றி ஏராளமான நாய்கள் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றன. கொரானா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமில்லை. இதனால் தெரு நாய்களின் பசியை போக்க முடியவில்லை. இதன் காரணமாக பல நாய்கள் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் கென்னல் கிளப் நிர்வாகி பார்வதி என்பவர் நாய்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

'ரோமியோ' காசிக்கு எதிராக வழக்கறிஞர்கள் போர்க்கொடி!!

இவர் பலரிடம் இருந்து நிதி சேகரித்து, அதைக் கொண்டு உணவு சமைத்து மினி லாரி மூலம் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். தற்போது தேரூர் முதல் நாகர்கோவில் வரை லாரியில் சென்று உணவளித்துக் கொண்டிருக்கிறார்.

நாள்தோறும் 250க்கும் மேற்பட்ட நாய்களுக்கு உணவளித்து வருவது குறிப்பிடத்தக்கது. தன்னைப் போல் பிறரும் தெருநாய்களுக்கு உணவளிக்க முன்வர வேண்டும் என்ற வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி