ஆப்நகரம்

நா உங்களுக்கு கை காட்டினேன்... நலம் விசாரித்துக் கொண்ட விஜய் வசந்த்- பொன்னார்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எதிரெதிர் துருவங்களான பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Samayam Tamil 18 Mar 2021, 8:56 pm
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் நடைபெற உள்ளது இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தற்போது மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
Samayam Tamil ponnaar vijay vasanth meeting


அந்த வகையில் நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் எம் ஆர் காந்தி மற்றும் திமுகவை சேர்ந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் இருவரும் நாகர்கோவிலில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.



அப்போது ஏற்கனவே கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இருவரும் திடீரென சந்தித்துக் கொண்டனர்.

மின்வெட்டு விமர்சனத்தை வெட்டி வீசிய கே.என்.நேரு... திமுக செய்தது என்ன?

அரசியல் நாகரிகம் போற்றும் வகையில் விஜய் வசந்த் நேரடியாக அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரடியாக சென்று சந்தித்து கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் இந்த சம்பவம் அப்பகுதியில் சுற்றி இருந்த அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி