ஆப்நகரம்

குமரியை விட்டு விலகும் கொரோனா: நல்லச் செய்தி வரத் தொடங்கியாச்சு!

தமிழக அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று விகிதம் 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 30 May 2021, 5:44 pm
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
Samayam Tamil குமரியை விட்டு விலகும் கொரோனா: நல்லச் செய்தி வரத் தொடங்கியாச்சு!


அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

அதன் பின்பு அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அட கடவுளே... கொரோனா பணிக்கு ஆளெடுக்கும் இடத்திலேயே கொரோனா பரவும் அபாயம்!
தொற்று விகிதம் 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறோம்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் உடனடியாக ஏற்படுத்த பணிகள் நடக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து குறைவான எண்ணிக்கையில் தற்போது குமரி மாவட்டத்திற்கு வருகிறது. ஆனால் இதை அதிகப்படுத்தத் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி