ஆப்நகரம்

பஸ் வருமா வராதா? கன்னியாகுமரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Samayam Tamil 1 Jun 2020, 8:55 pm
தமிழகத்தில் கொரோனா தடை உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இன்று முதல் குறைந்த அளவில் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை


கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 34 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாலும், அம்மாவட்டம் சிகப்பு மண்டலமாக இல்லாத பட்சத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதேபோல நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் காய்கறிச் சந்தையை வேறிடத்துக்கு மாற்றுவது குறித்தும் நடவடிக்கை கிடப்பில் உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

வந்தாச்சு எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு; களைகட்டிய கன்னியாகுமரி!

இதேபோன்று கேரள மாநிலத்தில் எழுகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படும் போது பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் அது குறித்து உரிய ஆலோசனைகளை பெற்ற பின்னர் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி