ஆப்நகரம்

கடும் பனிப்பொழிவு… மீன்பிடித் தொழில் பாதிப்பு!

பனிப்பொழிவு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப் பட்டுள்ளது.

Samayam Tamil 20 Jan 2022, 9:00 pm

ஹைலைட்ஸ்:

  • கடும் பனிப்பொழிவு
  • மீன்பிடித் தொழில் பாதிப்பு
  • கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பனிப்பொழிவு காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


விசைப்படகு மீனவர்கள் சுமார் 7-முதல் 10-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடிப்பதும் பைபர் படகு மீனவர்கள் தினம் தோறும் அதிகாலை கடலுக்கு சென்று மீன்பிடித்து அன்றே திரும்புவதும் வழக்கம்.

வேகத்துக்கு வேகத்தடை போட்ட பொதுமக்கள்… மிரண்டு போன அதிகாரிகள்!

தற்போது குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு மற்றும் நீரோட்ட மாறுபாடு காரணமாக கடலில் மீன்பிடிக்க செல்லாத நிலையில், 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி