ஆப்நகரம்

உழைப்பு மட்டுமே உயர்வு தரும்.. உழைப்புக்கு குறுக்கு வழி கிடையாது - நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழிசை அறிவுரை!

உழைப்பு மட்டுமே உயர்வு தரும் எனவும், உழைப்புக்கு குறுக்கு வழி கிடையாது எனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நாகர்கோயில் கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 29 Mar 2023, 3:04 pm

ஹைலைட்ஸ்:

  • உழைப்பு மட்டுமே உயர்வு தரும்
  • உழைப்புக்கு குறுக்கு வழி கிடையாது
  • கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆளுநர் தமிழிசை உரை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழிசை அறிவுரை
உழைப்பு மட்டுமே உயர்வு தரும் எனவும், உழைப்புக்கு குறுக்கு வழி கிடையாது எனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நாகர்கோயில் கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரியில் 130வது ஆண்டு விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆளுநர் தமிழிசை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 130வது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில், "தனது 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையால் இளம் வயது ஆளுநராக புதிய மாநிலமான தெலுங்கானாவுக்கு நியமிக்கப்பட்ட போது, இவர் என்ன சாதித்து விடப் போகிறார் என பேசினார்கள். குமரி மாவட்டத்துக்காரருக்கு எப்போதுமே பேச்சுத் திறமை அதிகம் என்பதால் மகப்பேறு மருத்துவரான நான், புதிய குழந்தையாக பிறந்துள்ள தெலுங்கானாவை சிறப்பாக பார்த்துக் கொள்வேன் என்றேன்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒரு குழந்தை பிறந்தாலும், இரண்டு குழந்தை பிறந்தாலும் சரியாக கையாள்வேன்:

ஓராண்டு காலம் சிறப்பாக செயல்பட்டதால் புதுச்சேரி மாநிலத்திற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டது. அப்போதும் கேள்வி எழுப்பினார்கள். ஒரு மாநிலத்தில் செயல்பட்டு வரும் நிலையில், எப்படி இன்னொரு மாநிலத்தை கவனிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்கள். அப்போது நான் கூறினேன், மகப்பேறு மருத்துவரான நான் ஒரு குழந்தை பிறந்தாலும், இரண்டு குழந்தை பிறந்தாலும் சரியாக கையாள்வேன் என்றேன். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளையும் கற்றுக் கொடுத்த இந்த கல்லூரி பாரத பிரதமரின் புதிய தேசிய கல்விக் கொள்கையை 130 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய கல்லூரி என்பது பாராட்டுக்குரியது என்றார்.

எனது உயர்வுக்கு காரணம் கடும் உழைப்பு:

எனது உயர்வுக்கு காரணம் கடும் உழைப்பு எனவும், உழைப்பதற்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது எனவும் கூறினார். கொரோனா காலத்தில் கவச உடைக்கு இந்தியா பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு இந்தியா 2 லட்சம் கவச உடை தயாரித்து வருவதாக கூறிய அவர், கொரோனா தடுப்பூசி இந்தியாவே தயாரித்து நாம் பயன்படுத்தி கொண்டிருப்பதன் மூலம் நாடு வளர்கிறது என்பது உறுதியாகிறது என்றார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான முடிவெடுக்கும் நிலைமையில் தான் இல்லை எனவும், முதல்வர் ரங்கசாமியுடன் இணைந்து நல்ல திட்டங்கள் புதுச்சேரிக்கு கொண்டு வருவதாகவும், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தின் மீது திரும்பிய பிரதமர் பார்வை.. ஆளுநர் தமிழிசை சொன்ன செம ஹேப்பி நியூஸ்..!

அதற்கு கருத்து கூற முடியாது:

முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் கல்லூரி விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்க வருகை தந்த போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என புதுச்சேரி மக்கள் கோரிக்கை விடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், தன்னால் அதற்கு கருத்து கூற முடியாது எனவும், அது குறித்து முடிவெடுக்கும் நிலைமையில் தான் இல்லை எனவும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருவதாகவும், நல்ல திட்டங்கள் கொண்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம் குறித்து தமிழக அரசையும், ஆளுநரையும் தான் கேட்க வேண்டும் எனவும் கூறினார். வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழகத்திற்கு ஆளுநர் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறித்து கருத்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க முடியாது எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி