ஆப்நகரம்

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை: இஸ்லாமிய அமைப்புகளின் ரகசிய பிளான்.. குமரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசின் தடை எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Sep 2022, 11:56 am

ஹைலைட்ஸ்:

  • பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை
  • இஸ்லாமிய அமைப்புகள் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்
  • மாவட்டம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தடை எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் பல பகுதிகளிலும், இஸ்லாமிய அமைப்பு அலுவலகங்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.


இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும், எஸ்.டி.பி.ஐ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் மத்திய அரசு நேற்று இந்த அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து ஐந்து ஆண்டுகள் தடை செய்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளான இடலாகுடி , திட்டுவிளை,தக்கலை , திருவிதாங்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.

காலி பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்க கூடாது - கன்னியாகுமரி போலீசார் அதிரடி உத்தரவு!

இஸ்லாமிய அமைப்புகள் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி