ஆப்நகரம்

சிதைந்த குமரி மாவட்டம்... திரும்பும் சகஜ நிலை, விடுமா கனமழை?

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மாவட்டமே ஸ்தம்பித்த நிலையில் தற்போது அது சகஜ நிலைக்கு மெது மெதுவாக திரும்பி வரத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 20 Oct 2021, 11:01 pm
கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த சூழலில் தற்போது சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில், திங்கள் சந்தை, சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பரவலான மழை பெய்தது.
Samayam Tamil சிதைந்த குமரி மாவட்டம்... திரும்பும் சகஜ நிலை, விடுமா கனமழை?


காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த கனமழையால் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கு முன் தொடங்கி 3 நாட்கள் நீடித்த கன மழையின் தாக்கம் காரணமாக மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரியின் மேற்கு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. மழையின் தாக்கம் குறைந்து தற்போது குமரி மாவட்டம் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. எனினும் சில கிராமங்களில் கனமழையின் தாக்கம் குறையாத நிலையில் உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி வாலிபர் மாயம்; புதரில் பொதுமக்கள் கண்ட..காட்சி!
இதனிடையே காலை முதல் குமரி மாவட்டத்தில் கடும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக மழை தொடராது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போதைய நிலவரப்படி நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, திங்கள்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த கனமழை காரணமாக மாவட்டத்தில் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலையே நிலவி வருகிறது.

அடுத்த செய்தி