ஆப்நகரம்

நாய் சுட்டித்தனம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

கன்னியாகுமரியில் நாய் ஒன்று தனது எஜமானருடன் மிகவும் நெருங்கி பழகி வருகிறது. உரிமையாளருடன் கொஞ்சுவது, பைக்கில் ஏறி குதித்து அமர்ந்து ஊர் சுற்றுவது என அந்த நாய் செய்யும் சேட்டைகள் பொதுமக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

Samayam Tamil 27 Oct 2021, 8:22 pm
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த சிங் என்பவர் தனது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கும் நாட்டு ரக நாய், அவருடன் பைக்கில் பின்பக்க இருக்கையில் நின்று கொண்டே ஒய்யாரமாக ஊர் சுற்றி வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Samayam Tamil உரிமையாளருடன் பைக்கில் சுற்றும் நாய்
உரிமையாளருடன் பைக்கில் சுற்றும் நாய்


பொதுவாக நாய்கள் என்றாலே தங்களது எஜமானர்கள் கட்டளையிடும் கட்டளைகளை பின்பற்றுவதால் இதை அநேகர் வீடுகளில் செல்ல பிராணியாக வளர்ப்பது வழக்கம்.

இதையும் தாண்டி, பெண் நாய்களுக்கு ஒரு சிலர் தங்களது சொந்த பெண் பிள்ளைகளுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல பல இடங்களில் வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் டைகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாட்டு ரக நாய் தனது உரிமையாளருடன் மிகவும் சகஜமாக பழகி வருகிறது. குறிப்பாக பைக்கில் தனது மகளுடன் பொருட்கள் வாங்க கடை வீதிக்கு செல்லும்போது அந்த நாயும் ஒய்யாரமாக பின்பக்க இருக்கையில் நின்று கொண்டே பைக்கின் வேகத்தையும் பொருட்படுத்தாமல் சமநிலையாக சாலையை வேடிக்கை பார்த்தப்படியே பயணித்து வருகிறது.

சிவசங்கர் பாபா சிரிப்பு சத்தம்; கடலில்கூட கிடைக்காத ஜாமீன்!

மேலும் கடையில் இருந்து பொருட்கள் வாங்கிவிட்டு தனது மகளை பைக்கில் ஏற்றி விட்டு எஜமானன் கை சொடுக்கு போட, டைகரும் மீண்டும் பின் இருக்கையில் துள்ளி தனது பாச பயணத்தை தொடர்கிறது.

அடுத்த செய்தி